நான் காதலிப்பது ??
நான் காதலிப்பது நீ என்று தான்
நினைத்து வாழ்த்து வந்தேன்
பின்புதான் தெரிந்தது நான் காதல் செய்தது
என் இதயத்தில் நீ ஏற்படுத்திய காயத்தை என்று
மருந்து போடுவதற்கோ மனமில்லை – காரணம்
உன்னை மறக்கும் எண்ணம் என் மனதிற்கு இல்லை
அப்பட பல மாதத்திற்கு பிறகு எனது முதல் பதிவு இது பிடித்திருந்தால் கீழே உள்ள பட்டனை அழுத்தி பகிர்த்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்
காதல் கவிதை
சிரித்து சிரித்து பேசியதால்
சிந்திக்காமலே காதலிதுவிட்டேன்
என்னுயிர் தோழன் என்றவளே
இன்று இவன் யார் என்றால்
காரணம் காதலா இல்லை
அவளின் கல் இதயமா
என்காதலை புரிந்துகொள்ளாமல்
பிரித்து சென்றவள் நீ
அதை புரிந்துகொள்ளாமல்
திரிந்து கொண்டிருப்பவன் நான்………..
காதலியே வரம் தருவாயோ
உன் மௌன மொழிகளை மொழி பெயர்க்க
தெரியாத முட்டாள் காதலன் நான்
உன் இதழ் பேசி கேட்டதை விட
உன் கண்கள் பேசி பார்த்ததே அதிகம்
கண் ஜாடையை நீக்கி என்றுதான்
உன் இதழ்களால் பேசுவாய்
காதலனாக வேண்டாம் நண்பனாக கூட வேண்டாம்
யாசித்து கேட்பவனிடம் இல்லை என்று சொல்லும்
சொல்லும் அளவுக்காவது வார்த்தை பரிமாற்றம் போதும்
–ப்ரியமுடன் ஜெயமாறன் நிலா ரசிகன்
விடை சொல்லி செல்
என்னுயிர் தோழியே நான் பார்த்த பார்வையை நீ
வேண்டாம் என ஒதுக்கி இருக்கலாம்
என் தொடர்தலை நீ தவிர்த்திருக்கலாம்
எனது கடிதங்களையும் நீ கிளிதிருக்கலாம்
ஊமையாக இருந்து என் உயிரை
உறிஞ்சுவிட்டாயே என் தோழியே
உன் தாகங்களை தணிக்க
என் இரத்தங்களா தேவை உனக்கு
பெண்ணே என் தோல்விகள்
உனக்கு வெற்றிகளா
என் கண்ணீர் துளிகள்
ஏனோ உனக்கு அமிர்தமாக உள்ளன
நீ என்னை விலகி சென்றது
எனக்கு வருத்தமில்லை
என்னை நேசித்த உன் இதயத்தை
எங்கு ஒலித்து வைத்தாயோ என்பதே
என் வருத்தமாக அமைந்தது
தோழனாக இருப்பதற்கு கூட தகுதி
இல்லாதவனா நான் விடை சொல்லி செல்
நிலவின் மீது காதல் வேண்டுகோள்
அழகு வெண்மதியே உன்னை நான் காதல் செய்தேன்
காரணம் சொல் என்றாய் என் காதலுக்கு…….
காரணமோ எனக்கு தெரியவில்ல
பதிலும் சொல்லவும் இயலவில்லை ………….
வெறும் கல்லைகூட கடவுள் என சொல்லும் போது
அதை நம்பி வணக்குகிறாய்
அதுபோல என்காதலை நீ வணங்க வேண்டாம்
காயபடுதாமல் இருந்தால் மட்டும் போதும் என் உயிர் தோழியே
ப்ரியமுடன் மாறன்
(நிலா ரசிகன்)
பிறந்த நாள் கொண்டாட்டம்
அன்புள்ள நண்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு என்னோட ப்லோக்க்கு இன்னைக்கு முதலாம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்து சொல்றவங்க சொல்லலாம் இல்ல அட பாவி ஒரு வருஷமா கவிதை என்ற பேருல மொக்கை போட்டு என்னகள சாவடிக்குறயனு திட்டுறவங்க திட்டலாம். அறிமுகம் இல்லாமல் புதிதாக கிடைத்த நண்பர்கள் கவலைகளை கூட காமெடியாக மாற்றக்கூடிய நல்ல நண்பர்களை குடுத்த பதிவுலகத்திற்கு என்றும் என் நன்றிகள் . யாரும் கேக் சாப்பிடாம போககூடாது இந்தாங்க எடுத்துகோங்க.
இதோடு மற்றும் ஒரு செய்தி இனி இந்த வலைதளத்தை நிலா ரசிகன் என மாற்ற உள்ளேன் காரணம் கேட்க்க கூடாது. அப்பறம் ஒரு முக்கியமான விஷயம் சத்தியமா நான் இன்னும் யாரையும் காதலிக்கலா ஏன யாரும் என்ன காதலிக்கலா இத வலைடளைதில் வரும் கவிதைகள் அனைத்தும் சும்மா பொழுது போக்குக்க எழுதுனது மற்றபடி வேற ஒன்னும் இல்ல. எனக்கும் காதல தவிர வேற ஒன்னும் எழுத தெரியல என்பதே உண்மை.
பிரிவின் வலியை உணர்த்தும் காதல் கவிதை
காதல் மிகவும் இனிமையானது என உணர்ந்தேன்
அவள் மேல் நான் காதல் கொண்ட போது
காதல் மிகவும் கொடியது என அறிந்தேன்
அவள் என் காதலை கொன்ற போது
கடவுள் என்னிடம் ஏதேனும் வரம் கேட்டால்
அவரிடம் நான் கேட்கும் வரம் ஒன்று மட்டுமே
அது அவள் நானாகவும் நான் அவளாகவும்
பிறக்க வேண்டும் அப்பொழுது தான் அவளுக்கு
காதலின் வேதனையும் பிரிவின் சோதனையும் புரியும்
காதலில் ரகசியம்
அவள் அழகின் ரகசியம்
என்னிடம் அழகு இல்லாததுதான்
என் அன்பின் ரகசியம்
அதை உணர அவளிடம் இதயம் இல்லாததுதான்
அவள் வெற்றியின் ரகசியம்
அவள் பின்னல் நான்
என் தோல்வியின் ரகசியம்
என் முன்னால் அவள்
.










